கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலியின் ஐந்து வயது மகள் ரம்ஜான் பாத்திமா கடந்த 18ம் தேதி டெங்கு காய்ச்சல் பாதிப்பில் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக 19ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, உடல்நிலை மோசமாகிய நிலையில் கடந்த 23ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று ( செப்டம்பர் 24, அதிகாலை ஒரு மணியளவில் சிறுமியின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி டெங்கு காய்ச்சல் பாதிப்பில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.
இதையடுத்து, சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது.
கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருவதையடுத்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலின் தாக்கங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.
இந்த காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் காய்ச்சலினால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்கள் ஏதும் வெளியில் வருவதில்லை எனவும் குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் தகவல்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரிக்கபதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இப்படி முறையான புள்ளிவிபரங்கள் பதியப்படாததால் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியில் தெரிவதில்லை.
அதேபோல டெங்கு காய்ச்சல் பாதிப்பில் நடைபெறும் மரணங்களும் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தாததால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலியின் ஐந்து வயது மகள் ரம்ஜான் பாத்திமா கடந்த 18ம் தேதி டெங்கு காய்ச்சல் பாதிப்பில் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக 19ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, உடல்நிலை மோசமாகிய நிலையில் கடந்த 23ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று ( செப்டம்பர் 24, அதிகாலை ஒரு மணியளவில் சிறுமியின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி டெங்கு காய்ச்சல் பாதிப்பில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.
இதையடுத்து, சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது.
கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருவதையடுத்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலின் தாக்கங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.
இந்த காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் காய்ச்சலினால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்கள் ஏதும் வெளியில் வருவதில்லை எனவும் குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் தகவல்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரிக்கபதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இப்படி முறையான புள்ளிவிபரங்கள் பதியப்படாததால் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியில் தெரிவதில்லை.
அதேபோல டெங்கு காய்ச்சல் பாதிப்பில் நடைபெறும் மரணங்களும் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தாததால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.