திருப்பூர் : அதிமுக கூட்டணியில் இருந்தாலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவினர் விஜயகாந்தை சந்தித்து பேசியதன் பிறகே தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும், என திருப்பூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று திருப்பூரில் பேட்டியளித்தார்.
திருப்பூர் : அதிமுக கூட்டணியில் இருந்தாலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவினர் விஜயகாந்தை சந்தித்து பேசியதன் பிறகே தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும், என திருப்பூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று திருப்பூரில் பேட்டியளித்தார்.
தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் அவர்களின் நண்பரான திருப்பூரை சேர்ந்த லிங்க்ஸ் சவுகத் அலி அவர்கள் இன்று உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடலுக்கு மரியாதை செலுத்த தேமுதிக சார்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "லிங்ஸ் அவர்களின் மறைவு விஜயகாந்த்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு தேமுதிக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாகவும், இருப்பினும் தற்போது தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதிமுகவினர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பின்பு, தேமுதிக தனது முடிவினை அறிவிக்கும்" என தெரிவித்தார்.
தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் அவர்களின் நண்பரான திருப்பூரை சேர்ந்த லிங்க்ஸ் சவுகத் அலி அவர்கள் இன்று உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடலுக்கு மரியாதை செலுத்த தேமுதிக சார்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "லிங்ஸ் அவர்களின் மறைவு விஜயகாந்த்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு தேமுதிக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாகவும், இருப்பினும் தற்போது தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதிமுகவினர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பின்பு, தேமுதிக தனது முடிவினை அறிவிக்கும்" என தெரிவித்தார்.