பெட்ரோல் நிலையங்கள் விற்பனை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு


விற்பனை விளிம்புத் தொகையை உயர்த்தக் கோரி, பெட்ரோல் நிலையங்களில் விற்பனை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.முரளி கடலூரில் வியாழக்கிழமை கூறியது:

இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் அதன் முகவர்களுக்கு விற்பனை விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்கவில்லை. இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, வருகிற 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விளக்குகளை அணைத்து விற்பனை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். இதையடுத்து, நவம்பர் 3, 4ஆம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்களிலிருந்து தொடர் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

அதைத்தொடர்ந்து, மாதத்தில் 2 மற்றும் 4ஆவது சனிக்கிழமைகளில் பெட்ரோலிய பொருள்களின் விற்பனை நிறுத்தப்படும். நவம்பர் 5 ஆம் தேதி முதல் விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். விற்பனை நிலையங்களில் அமைந்துள்ள எண்ணெய் நிறுவனங்களின் சின்னங்களில் உள்ள விளக்குகள் நவம்பர் 5ஆம் தேதி முதல் அணைக்கப்படும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விற்பனை நிலையங்களில் விற்பனை நிறுத்தப்படும். தமிழகம், புதுவையில் 4,500 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...