மேட்டுப்பாளையத்தில் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நகர பகுதிகளில் 24 மணி நேரமும் தடையில்லா குடிநீர் வழங்கும் வகையில் ஜிக்கா திட்டமும் அறிமுகப்படுத்தபட்டது.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நகர பகுதிகளில் 24 மணி நேரமும் தடையில்லா குடிநீர் வழங்கும் வகையில் ஜிக்கா திட்டமும் அறிமுகப்படுத்தபட்டது. 

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகியும் நகர பகுதிகளில் குடிநீர் பிரச்சனை என்பது அடிக்கடி ஏற்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடூர், மாகாதேவபுரம், மணிநகர் உள்ளிட்ட நகராட்சியின் பல பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. 

குறிப்பாக, நடூர் பகுதியில் 20 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்காதது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 



முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்தும், உடனடியாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வலியுறுத்திம் கோசங்களை எழுப்பிய பொதுமக்கள் ஒரு மணி நேரமாக போராட்டம் நடத்தினர். இதனால் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

குடிநீர் வழங்கல் குழாய் உடைப்பு மற்றும் நீரேற்று நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வுகானப்பட்டு வருவதாகவும், தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடபட்டது. 

பொதுமக்களின் மறியல் போராட்டம் காரணமாக அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...