திருப்பூரில் நான்கு வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடி

திருப்பூர் : திருப்பூரில் 4 வயது சிறுமியிடம் பனியன் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.


திருப்பூர் : திருப்பூரில் 4 வயது சிறுமியிடம் பனியன் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, இவரது வீட்டதுகே குடியிருந்து வரும் கந்தசாமி (34) பனியன் தொழிலாளி. இதனிடையே, இன்று காலை முதலே குடிபோதையில் வீட்டில் இருந்து வந்த கந்தசாமி, தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். 

விளையாடி கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் சிறுமியை தேடி வர, சிறுமியின் அலரல் சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் கந்தசாமி வீட்டிற்குள் சென்று பார்த்த போது சிறுமியை கந்தாசாமி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. 



கடும் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொது மக்கள் கந்தசாமியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். 



இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்.

நான்கு வயது சிறுமியை பலாத்காரம்.செய்தவரை பொது மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...