கோவை : தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக அதிக அளவில் மண் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
கோவை : தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக அதிக அளவில் மண் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
கோவை மாவட்டம் தடாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல்சூளைகளுக்காக அதிகளவில் மண் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனை தடுக்க வேண்டும் என விவசாயிகள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இன்று மீண்டும் மனு அளித்தனர்.
மனு அளித்த பின் பேட்டியளித்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால், செங்கல் சூளைகளுக்காக அதிக அளவில் மண் எடுப்பதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு, தடுப்பணைகள் பாதிப்பு, யானை வழித்தடங்கள் பாதிப்பு என அனைத்து பாதிப்புகளையும் மீண்டும் அதிகாரிகளிடம் விளக்கி இருப்பதாகவும், மண் எடுப்பதை தடுக்க வில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் அவர் தெரிவித்தார்.