உதகை மார்க்கெட் பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றம்

நீலகிரி : உதகை மார்க்கெட் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முற்பட்ட போது, நகராட்சி அதிகாரிகளிடம் கடையின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மார்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

நீலகிரி : உதகை மார்க்கெட் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முற்பட்ட போது, நகராட்சி அதிகாரிகளிடம் கடையின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மார்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.



உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரப் பகுதிகளில் நடைபாதைகளில் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அகற்றி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மத்திய பேருந்து நிலையம் அருகில் சுமார் 8க்கும் மேற்பட்ட கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். மேலும், நகரப்பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் சுமார் இருபது கடைகளில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.



பின்பு, கடையின் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் தங்களுக்குச் சரியான ரசீது உள்ளது எனவும் ஆகவே அந்த கடைகளை அகற்ற வேண்டாம், தாங்களாகவே எடுத்துக் கொள்வதோடு, கடைக்கு உண்டான ரசீதையும் தங்களிடம் காண்பித்து கடைகளை வைத்துக் கொள்கிறோம் என முறையிட்டனர். பின்பு இன்று மாலை வரை நேரம் தருமாறும் அதன்பின் தாங்களாகவே கடைகளை அப்புறப்படுத்தி விடுகிறோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த கடைகள் மட்டும் குறியீடு செய்யப்பட்டு மீதமுள்ள கடைகள் ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் மார்க்கெட் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...