மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஊதிய உயர்வு கோரி துப்புறவு பணியாளர்கள் தர்ணா

கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஊதிய உயர்வு கோரி துப்புறவு பணியாளர்கள் வேலைகளைப் புறக்கணித்து, நகராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஊதிய உயர்வு கோரி துப்புறவு பணியாளர்கள் வேலைகளைப் புறக்கணித்து, நகராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 100க்கும் மேற்பட்ட ஆண் பெண் துப்புறவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும், இந்த ஒப்பந்த பணியாளர்களே அன்றாடம் குப்பைகளை சேகரித்து அதனை அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவிலான ஊதியமே கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பெண்களுக்கு 190 ரூபாயும் ஆண்களுக்கு 230 ரூபாயும் அளிக்கபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் பெயரில், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களுக்கான கூலியை 400 ரூபாயாக உயர்த்திய பிறகும் அதனை வழங்காமல் நகராட்சி ஒப்பந்ததாரர் காலதாமதம் செய்வதாக கூறி, 100க்கும் மேற்பட்டோர் வேலைகளைப் புறக்கணித்துவிட்டு நகராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதிய உயர்வான 400 ரூபாய் கூலியை வழங்க கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், மேட்டுப்பாளையத்தில் அனைத்து பகுதிகளிலும் இன்று குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாததால் போராட்டம் தொடர்கிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...