திருப்பூரில் அரசு ஊழியர்கள் என கூறி மோசடி செய்த இருவர் கைது

திருப்பூர் : திருப்பூர், பி.என். ரோடு, போயம்பாளையம், தெற்கு பிச்சம்பாளையம் பாரதிநகர், உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் என்று கூறி சொகுசு காரில் வந்த இரண்டு நபர்கள் பனியன் நிறுவனங்களில் பணம் கேட்டு மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூர், பி.என். ரோடு, போயம்பாளையம், தெற்கு பிச்சம்பாளையம் பாரதிநகர், உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் என்று கூறி சொகுசு காரில் வந்த இரண்டு நபர்கள் பனியன் நிறுவனங்களில் பணம் கேட்டு மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

அப்போது, பாரதிநகர் பகுதியிலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஆய்வு செய்வதாக கூறி வலுக்கட்டாயமாக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அந்த பனியன் நிறுவன உரிமையாளர் இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசுக்கு தகவல் அளித்தார். 

இதனை அறிந்த மோசடி நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதை அடுத்து சுதாரித்துக்கொண்ட கம்பெனி உரிமையாளர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு அவர்களை மடக்கி பிடித்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். 



விசாரணையில் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த குமார் (45) கன்னியாகுமரியை சேர்ந்த முருகன்(60) என்பது தெரியவந்தது. 



மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 84 ஆயிரம் ரொக்கம், இரண்டு செல்போன்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த அனுப்பர்பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...