திருப்பூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் உழவர் சந்தை மாற்றப்பட உள்ளதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடை அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் உழவர் சந்தை மாற்றப்பட உள்ளதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடை அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டதையடுத்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளில் ஒன்றாக தற்போது, திருப்பூர் பல்லடம் சாலையில் செயல்பட்டு வரும் தென்னம்பாளையும் உழவர் சந்தை அப்புறப்படுத்தப்பட உள்ளன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் காய்கறிகளைக் கொண்டு வந்து செல்ல நகரின் மையப் பகுதியாக உள்ள இந்த இடத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், காய்கறி கடை அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.