5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு ஒத்திவைப்பு நடைமுறை படுத்தப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது - சுப்புலட்சுமி ஜெகதீசன்

கோவை : 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு நடக்காது என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது சந்தேகமாக இருப்பதாகவும், இதை மத்திய அரசு சொன்னால் நம்பலாம், மாநில அரசு இதில் எந்தளவு உறுதியாக இருக்கும், என்பது தெரியவில்லை, என திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார்.

கோவை : 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு நடக்காது என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது சந்தேகமாக இருப்பதாகவும், இதை மத்திய அரசு சொன்னால் நம்பலாம், மாநில அரசு இதில் எந்தளவு உறுதியாக இருக்கும், என்பது தெரியவில்லை, என திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு பணி செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர் ஈசன், P.R.சண்முகம், முத்துவிஸ்வநாதன், பார்த்தசாரதி, தங்கமுத்து மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.



கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் ஆகியோர் இன்று சிறையில் சந்தித்து ஆதரவினை தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன் உயர் மின் அழுத்த கோபுரங்களை விவசாயிகளின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு அமைக்க கூடாது என தெரிவித்தார். 

"ஏற்கனவே, அமைக்கப்பட்ட உயர் மின் வழித்தடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புதிதாக அமைக்கப்பட இருக்கும் உயர்மின் கோபுரங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை", என அவர் தெரிவித்தார். 

உயர் மின் கோபுரம், கெயில் போன்றவை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் இந்த திட்டங்களுக்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் எழுப்பும், என்றார்.

இந்தியை கொண்டு வந்து உட்கார வைத்து விட்டால் எதிர்ப்பு இருக்கும், ஓட்டு கேட்டு செல்ல முடியாது என்பதால் கர்நாடாகாவில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா இந்தியை எதிர்ப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...