5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை : 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை கண்டித்து கோவை டாடாபாத் அருகே திமுகவினர் நா.கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை கண்டித்து கோவை டாடாபாத் அருகே திமுகவினர் நா.கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. அதை மற்ற மாநில அரசுகள் செயல்படுத்தாத நிலையில், தமிழக அரசு உடனடியாக அதை அமல்படுத்தும் நடவடிக்கையாக பொதுத்தேர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தது. இது தமிழக மக்கள் மாணவர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களைப் பலரும் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று திமுகவினர் கோவையில் எம்.எல்.ஏ நா.கார்த்திக் தலைமையில் டாடாபாத் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், குழந்தைகளைச் சித்திரவதை செய்யாதே என்றும் பொதுத் தேர்வை ரத்து செய் என்றும் மாணவர்கள் நலனில் விளையாடாதே என்றும் முழக்கமிட்டனர்.

இந்த பொதுத் தேர்வை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...