நீலகிரி சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை அரைக்கும் இயந்திரம்; மக்கள் வரவேற்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை அரைக்கும் இயந்திரம் அமைக்கும் திட்டம், சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை அரைக்கும் இயந்திரம் அமைக்கும் திட்டம், சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 1 முதல் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்கு முழு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு முற்றிலுதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் உதகை நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பிளாஸ்டிக் அரைவை இயந்திரம் கடந்த வாரம் வைக்கப்பட்டது. 



இதனைத் தாெடர்ந்து. இன்று உதகை பேருந்து நிலையத்தில், அந்த பிளாஸ்டிக் அரவை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

இதில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களுடன் வரும் சுற்றுலா பயணிகள் அந்த இயந்திரத்தில் அதை போடும் போது, அது அரைக்கப்பட்டு துகள்கள் மற்றும் தாவர கழிவுகள் மூலம் உரமாக மாற்றப்பட்டு பூங்காவில் உள்ள பல்வேறு பூச்செடிகளுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை மாவட்டம் முழுவதும் அமைக்கு்ம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...