அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனைக்குச் செல்லும் வழியில், ஒரு கோடியே 89 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் சாலையைத் திறந்து வைத்தார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனைக்குச் செல்லும் வழியில், ஒரு கோடியே 89 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் சாலையைத் திறந்து வைத்தார்.

பின்னர், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2500 ஹெக்டர் அளவிலான விளைநிலங்களுக்கு காய்கறி வீரிய விதைகளை வழங்கிய அமைச்சர் வேலுமணி, 250 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடக் கூடிய கமலா ஆரஞ்சு நாற்றுகளையும் விவசாயிகளுக்கு வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்குதல் மற்றும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பிற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து உச்ச நீதிமன்றத்திலேயே தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் கேட்கும் உதவியை அரசு செய்து கொடுக்கும் என்றார்.



மேலும், 50 ஆண்டுகாலத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளதாகவும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்தியாவிலேயே அதிக கடன் வழங்கியது தமிழக அரசு தான் என்று கூறிய அவர், உதகையில் மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பாக முதல்வரிடம் வலியுறுத்தப்படும் எனவும் அம்மாவின் சொந்த மாவட்டம் நீலகிரி என்பதால் பல்வேறு திட்டங்களையும் தற்போது நிறைவேற்றி வருவதாக கூறினார்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...