மாவோயிஸ்ட் ஆதரவாளர் டேனிஸ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர் ; நீதிமன்ற வளாகத்தில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

நீலகிரி : குன்னூர் அருகே ஆதிவாசி கிராமத்தில் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர் டேனிஸ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீலகிரி : குன்னூர் அருகே ஆதிவாசி கிராமத்தில் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர் டேனிஸ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்திற்கு சென்ற டேனிஸ் மீது அரசுக்கு எதிராக மக்களிடம் பேசியது, போஸ்டர்கள் ஒட்டியது தொடர்பாக கொலக்கொம்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது.

இப்படியிருக்க கடந்த மாதம் 29-ம் தேதி கொலக்கொம்பை காவல் துறையினரால் டேனிஸ் கைது செயப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்தநிலையில் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் டேனிஸ் இன்று உதகை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த டேனிஸ் இளைஞர்களும், மாணவர்களும் காட்டையும் நாட்டையும் விற்கும் மோடிக்கு எதிராக போராடுவோம் எனவும் தனி தமிழ்நாடு அமைக்க ஒன்றிணைவோம் எனவும் காஷ்மீரை பாதுகாக்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 26 ம் தேதி மீண்டும் ஆஜராக மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...