கோவை : கோவையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்களை குறித்து அவதூறாக கோஷம் எழுப்பி கலகம் செய்யும் நோக்கில் செயல்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை மாநகர போலீசார் கைது செய்தனர்.
கோவை : கோவையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்களை குறித்து அவதூறாக கோஷம் எழுப்பி கலகம் செய்யும் நோக்கில் செயல்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை மாநகர போலீசார் கைது செய்தனர்.
கோவையில் கடந்த ஆறாம் தேதி விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இப்படி கலந்துகொண்ட இளைஞர்களில் ஒரு சில குழுவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காவல்துறை அறிவிப்பை மீறியும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இப்படியிருக்க வி.எச்.பி அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக கோஷம் எழுப்பி ஊர்வலம் சென்றதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து விஎச்பி நிர்வாகிகள் லோகநாதன், அரவிந்த், சிவசாமி என்ற மூன்று பேரை ஆர்.எஸ்.புரம் போலிசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது கலகம் செய்வதற்கு தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்படுதல் என்ற இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
சமூக வலைதளங்களில் இருந்த காணொளி அடிப்படையில் உதவி ஆய்வாளர் மோகனகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.