குழந்தைக்கு தடுப்பூசி போட்டு ஊசி முறிந்த விவகாரம் ; மருத்துவமனை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்நிலையத்தில் பெற்றோர் புகார்

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு ஊசி முறிந்த விவகாரத்தில் மருத்துவமனையில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி காவல்நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் வந்து பெற்றோர் புகார் அளித்தனர்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு ஊசி முறிந்த விவகாரத்தில் மருத்துவமனையில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி காவல்நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் வந்து பெற்றோர் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர் புரம் பகுதியை சேர்ந்த மலர்விழி பிரபாகரன் தம்பதியினருக்கு கடந்த 21ம் தேதி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதில் குழந்தைக்கு கை மற்றும் தொடை பகுதியில் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், ஊசி முறிந்து தொடை பகுதியில் நின்றது. பின்னர் அதனை பெற்றோர்கள் பார்த்து அகற்றினர்.

பின்னர் இது குறித்து, அலட்சியமாக சிகிச்சை அளித்த சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் கடிதம் அளித்தனர். இந்த நிலையில் அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி குழந்தையின் பெற்றோர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர்.

வழக்கறிஞர்களுடன் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்த குழந்தையின் தந்தை பிரபாகரன் சம்பந்தப்பட்ட பணி மருத்துவர் மற்றும் செவிலியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். பின்னர் பேசிய குழந்தையின் தந்தை பிரபாகரன், குழந்தைக்கு நேர்ந்த அவலம் குறித்து மருத்துவமனையில் புகார் அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவே கடும் மன உளைச்சல் ஏற்பட்டு தனது கும்பமே இதனால் பாதிக்கப்பட்டது. எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க தற்போது புகார் அளித்துள்ளதாகவும் இனி வேறு எந்த குழந்தைக்கும் இது மாதிரியான நிகழ்வுகள் ஏற்படுவதை அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.

மேலும். இது குறித்து பேசிய வழக்கறிஞர்கள், தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போதிய பரிசோதனை இல்லாமல் மருந்துகள், இது போன்ற ஊசிகளை பயன்படுத்துவதாக கூறினர். இது குறித்து பலமுறை அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் அலட்சியமாக இருப்பதாக கூறிய வழக்கறிஞர் ரகுமான், அரசும் சுகாதாரத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...