திருப்பூர் : நான்கு வருடங்களாக மாற்றுதிறனாளிக்கான இரு சக்கர வாகனம் வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், ஒரு வார காலத்திற்குள் இருசக்கர வாகனம் வழங்காவிட்டால் குடும்பத்தோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மாற்றுதிறனாளி ஒருவர் இன்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
திருப்பூர் : நான்கு வருடங்களாக மாற்றுதிறனாளிக்கான இரு சக்கர வாகனம் வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், ஒரு வார காலத்திற்குள் இருசக்கர வாகனம் வழங்காவிட்டால் குடும்பத்தோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மாற்றுதிறனாளி ஒருவர் இன்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான உதயகுமார், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் முத்தனம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இதனிடையே உதயகுமார் பிறவியிலிருந்தே மாற்றுத்திறனாளியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும் தனக்கு இருசக்கரம் வாகனம் வேண்டி மனு அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாகக் கூறும் உதயகுமார், இனியும் மாவட்ட நிர்வாகம் இருசக்கர வாகனம் வழங்காமல் காலம் கடத்தும் பட்சத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின் போது ஆட்சியர் அலுவலகத்தில் தான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.

திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான உதயகுமார், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் முத்தனம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இதனிடையே உதயகுமார் பிறவியிலிருந்தே மாற்றுத்திறனாளியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும் தனக்கு இருசக்கரம் வாகனம் வேண்டி மனு அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாகக் கூறும் உதயகுமார், இனியும் மாவட்ட நிர்வாகம் இருசக்கர வாகனம் வழங்காமல் காலம் கடத்தும் பட்சத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின் போது ஆட்சியர் அலுவலகத்தில் தான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.