விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடிய வழக்கு: இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேர் கைது

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடி ஊழியர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடி ஊழியர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த 5ஆம் திருப்பூர் மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன. 

அப்போது, அங்கேரிபாளையம் சாலையில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தனியார் பின்னலாடை நிறுவனத்தில் அத்துமீறி விநாயகர் சிலையுடன் புகுந்த இந்து முன்னணியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் விநாயகர் சதுர்த்தியின் போது நன்கொடை  தரமறுத்ததாக  தெரிவித்து  கற்களைக் கொண்டும் இரும்பு கம்பிகளை கொண்டும் தாக்கினர் இதில் பின்னலாடை நிறுவனத்தின் ஜன்னல் கண்ணாடிகள் பூந்தொட்டிகள் சேதமடைந்தன மேலும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களையும் தாக்கினர் இதில் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.  

இதுகுறித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்து முன்னணியை சேர்ந்த இருபது பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதனடிப்படையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசார் கார்த்திக் ,  ராதா கிருஷ்ணன் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து முன்னணியின் இத்தகைய செயல்பாட்டை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகின்ற 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...