விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடி ஊழியர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடி ஊழியர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த 5ஆம் திருப்பூர் மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன.
அப்போது, அங்கேரிபாளையம் சாலையில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தனியார் பின்னலாடை நிறுவனத்தில் அத்துமீறி விநாயகர் சிலையுடன் புகுந்த இந்து முன்னணியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் விநாயகர் சதுர்த்தியின் போது நன்கொடை தரமறுத்ததாக தெரிவித்து கற்களைக் கொண்டும் இரும்பு கம்பிகளை கொண்டும் தாக்கினர் இதில் பின்னலாடை நிறுவனத்தின் ஜன்னல் கண்ணாடிகள் பூந்தொட்டிகள் சேதமடைந்தன மேலும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களையும் தாக்கினர் இதில் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்து முன்னணியை சேர்ந்த இருபது பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதனடிப்படையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசார் கார்த்திக் , ராதா கிருஷ்ணன் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து முன்னணியின் இத்தகைய செயல்பாட்டை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகின்ற 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.