கோவை : கோவை அடுத்த ராஜவீதி தேர்நிலை திடல் அருகே மூதாட்டி மீது போலீஸ் வாகனம் மோதி பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோவை : கோவை அடுத்த ராஜவீதி தேர்நிலை திடல் அருகே மூதாட்டி மீது போலீஸ் வாகனம் மோதி பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோவை மாநகரில் நடைபெற்று வரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்திற்காக இன்று ராஜவீதி தேர்நிலை திடல் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு காவல்துறையினரை அழைத்து செல்லும் பேருந்து, ரோந்து பணியில் இருந்தது.

இந்தப் பேருந்தானது முன் நோக்கி வரும்போது, பேருந்தின் ஒரு பகுதியிலிருந்து ஒரு மூதாட்டி பேருந்தின் முன் பகுதியை தாண்டி செல்ல முற்பட்டார். ஆனால் மூதாட்டி வருவதை கவனிக்காத பேருந்தின் ஓட்டுநர், மூதாட்டியின் மீது மோதினார். இதில் மூதாட்டி பேருந்தின் சக்கரத்தில் மாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, விபத்து குறித்து பெரிய கடைவீதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி, பேரூர் பகுதியை சேர்ந்த கலா (55)என்பது தெரியவந்துள்ளது. இந்த மூதாட்டி ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு பொறிக்கடையில் வேலை பார்த்து வந்ததும், இன்று காலை வேலைக்கு செல்ல பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.