கோவையில் பிணைய பத்திர உறுதிமொழியை மீறி குற்றத்தில் ஈடுபட்ட நபர் ; இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து பொள்ளாச்சி ஆர்டிஓ அதிரடி

கோவை : உக்கடம் பகுதியைச் சேர்ந்த நபர் இனி குற்றங்களில் ஈடுபடமாட்டேன் என பிணைய பத்திரம் எழுதிக் கொடுத்த நிலையில், உறுதி மொழியை மீறியதாக சிஆர்பிசி 110 இன் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை : உக்கடம் பகுதியைச் சேர்ந்த நபர் இனி குற்றங்களில் ஈடுபடமாட்டேன் என பிணைய பத்திரம் எழுதிக் கொடுத்த நிலையில், உறுதி மொழியை மீறியதாக சிஆர்பிசி 110 இன் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையில் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, உணவு பொருட்கள் கடத்தல் போன்ற குற்றங்களை தடுக்க காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறன.

இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் பிணைய பத்திரம் எழுதி வாங்கி உறுதிமொழியை மீறும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இப்படியிருக்க தொடர் குற்ற சம்பவங்கள் மற்றும் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் நபரொருவர் உறுதிமொழியை மீறியதாக வருவாய்துறை அதிகாரியால் கடுங்காவல் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

உக்கடம் பகுதியை சேர்ந்தவர் அபிஹபிப் ரகுமான் (42). இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அதேபோல இவர் மீது இரண்டு முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.



இந்த நிலையில் கடந்த ஜீலை மாதம் 19ம் தேதி பொள்ளாச்சி வருவாய் துறை அதிகாரி முன்னிலையில் அபிஹபிப் ரகுமானிடம் குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என பிணையப்பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.

ஆனால் அவர் வாக்குறுதியை மீறி கடந்த மாதம் 22ஆம் தேதி 1150 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முற்ப்பட்டுள்ளார்.

அப்போது தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அபிஹபிப் ரகுமானை கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இப்படியிருக்க உறுதிமொழியை மீறியதாக அபிஹபிப் ரகுமானை 110 சி.ஆர்.பி.சி சட்டத்தின் கீழ் வரும் 2021 ஆம் ஆண்டு ஜீலை 15ம் தேதி வரை சிறையில் அடைக்க வருவாய் துறை அதிகாரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.

கோவை மாநகரில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணனின் முயற்சியால் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் இந்த சிறப்பு நடவடிக்கை தற்போது அரசுத் துறையின் மற்ற அதிகாரிகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குற்றங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...