கோவையில் 1519 விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் கரைக்கப்பட்டன

கோவை : கோவையில் விநாயகர் சதுர்த்தியையடுத்து இன்று முதற்கட்டமாக இந்து அமைப்புகள் மற்றும் பொது மக்களால் வைக்கப்பட்ட 1519 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

கோவை : கோவையில் விநாயகர் சதுர்த்தியையடுத்து இன்று முதற்கட்டமாக இந்து அமைப்புகள் மற்றும் பொது மக்களால் வைக்கப்பட்ட 1519 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

நாடு முழுவதும் கடந்த 2 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையடுத்து அனைத்து பகுதிகளிலேயும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் களிமண் மற்றும் காகித கூல்களால் ஆன விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிப்பட்டனர்.



இந்த நிலையில் இந்த சிலைகளை வழக்கம்போல கரைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதில் கோவை மாநகர காவல் எல்லை மற்றும் கோவை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 1519 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

இதில் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சிங்காநல்லூர் குறிச்சி, குனியமுத்தூர் உள்ளிட்ட மூன்று குளங்களில் இன்று முதற்கட்டமாக 159 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

அதேபோல மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம்,துடியலூர், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1350 சிலைகள் கரைக்கபட்டது.

அதேபோல மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஐபிஎஸ் தலைமையில் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் பதட்டமான பகுதியான மேட்டுப்பாளையம் பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ், ரேப்பிட் ஆக்சன் போர்ஸ் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தொடர் பாதுகாப்பினால் கோவை மாவட்டத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற்றது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...