திருப்பூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் கைது : கை, கால்களில் கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர்

திருப்பூர் : திருப்பூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்த போலிசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.


திருப்பூர் : திருப்பூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்த போலிசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன். திமுகவின் மாணவரணி பொறுப்பில் உள்ள அவர் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். கடந்த 1-ம் தேதி இரவு. அப்பகுதியில் பாலமுருகன் நடந்து சென்ற போது, அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது.

இச்சம்பவம் தொடர்பாக வடக்கு போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 



இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் நண்பர் ஒருவரது வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கும்பலைச் சுற்றி வளைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள், திருப்பூர் சூசையாபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன், ராயபுரம் மிலிட்டரி காலனியை சேர்ந்த நந்தகுமார், தஞ்சாவூர் பட்டுக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார், சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பது தெரிந்தது. விக்னேசுக்கும் பாலமுருகனுக்கும் பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்சினை காரணமாக விக்னேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பிறகு அவர்கள் கை, கால்களில் அடிபட்டு கட்டு போட்ட நிலையில் மாலை திருப்பூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...