கோவை குனியமுத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன

கோவை : கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள குளத்தில், கடந்த 3 தினங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.


கோவை : கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள குளத்தில், கடந்த 3 தினங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



இதை தொடர்ந்து இன்று முதற்கட்டமாக இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட்டு வருகிறது. 



அதேபோல இந்த சிலைகள் ஆரவாரத்துடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக வந்து குளகரையோரத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டுக் கரைக்கப்பட்டு வருகிறது.



இதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் வரும் பாதைகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதில் தற்போது குனியமுத்தூர் உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள குளத்தில் 28 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்த குனியமுத்தூர் குளத்தில் உதவி ஆணையாளர் சந்திரசேகரன் தலைமையிலான நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிலைகளை கரைக்க வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி ஆகியவை சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...