கோவை : கோவையில் உள்ள வஉசி பூங்கா மிருகக்காட்சிசாலையை அடுத்த 9 மாதங்களுக்குள் விரிவுபடுத்த உள்ளதாக மத்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை : கோவையில் உள்ள வஉசி பூங்கா மிருகக்காட்சிசாலையை அடுத்த 9 மாதங்களுக்குள் விரிவுபடுத்த உள்ளதாக மத்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் (CZA) கோவையில் உள்ள வஉசி பூங்கா மிருகக்காட்சிசாலையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், விரிக்க பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு முறை அறிக்கை அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 29 ஏக்கருக்கு மிருகக்காட்சிசாலையை விரிவுபடுத்துவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிக விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளனர். 4.35 ஏக்கர் பரப்பளவு கொண்ட தற்போதைய மிருகக்காட்சிசாலையில் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றைக் கொண்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு மிருகக்காட்சிசாலையை நடத்துவதற்கு மாநகராட்சியிடம் வழங்கப்பட்ட உரிமத்தை மத்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் ரத்து செய்தது. அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு, சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளின் நல்வாழ்வுக்கான சில தரங்களை பூர்த்தி செய்ய மத்திய மிருகக்காட்சிசாலையின் ஆணைய அறிவுறுத்தல்களின்படி, மிருகக்காட்சிசாலையை புதுப்பிக்க வேண்டும். இதனால் மாநகராட்சி தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள மொத்தம் 40 ஏக்கரில் 25 ஏக்கரில் மிருகக்காட்சிசாலை அமைக்க கவனம் செலுத்தியுள்ளது.
அதேபோல 'செம்மொழி பூங்கா'வை உருவாக்க மாநில அரசு 2010ல் நகர மாநகராட்சிக்கு வழங்கியிருந்தது. செம்மொழி பூங்காவில் ஒதுக்கப்பட்ட மொத்த பரப்பளவில், ஆறு ஏக்கர்களை தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் (எஸ்.டி.ஏ.டி) ஒப்படைக்க முந்தைய திட்டம் இருந்த நிலையில் தற்போது இத்திட்டத்தில் சில சிறிய மாற்றங்களைச் செய்ய மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து ஒரு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வ.உ.சி பூங்காவின் முழு பரப்பளவையும் பயன்படுத்துமாறு தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தரப்பில் கோரப்பட்டுள்ளது, அதேசமயம் செம்மொழி பூங்காவில் ஒதுக்கப்பட்ட பகுதி மிருகக்காட்சிசாலைக்கு பயன்படுத்தப்பட வேண்டும். பின்னர், விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள் ஆகியன செம்மொழி பூங்கா மற்றும் புதிய இடத்திற்கு நகர்த்தப்படும் எனவும் மேலும் புதிய விலங்குகளும் மிருகக்காட்சிசாலையில் சேர்க்கப்படும் எனவும் தற்போதைய 4.35 ஏக்கர் மிருகக்காட்சிசாலையானது, பொழுதுபோக்கு வசதிகளுடன் புதுப்பிக்கப்படும் என்றார்.
மேலும், அடுத்த 9 மாதங்களுக்குள் டெண்டர் விடப்பட்டு, மிருகக்காட்சிசாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டு, ஒரு வருட காலத்திற்குள் விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.