மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி கோவையில் செப்., 5ம் தேதி முதல் மாவட்ட அளவிலான தபால் கண்காட்சி

கோவை : கோவையில் "சாந்திபெக்ஸ்" என்ற தலைப்பில் மகாத்மா காந்தி 150வது பிறந்தநாளை முன்னிட்டு தபால் கண்காட்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுதில் கோபால் ஜாக்ரே தெரிவித்தார்.

கோவை : கோவையில் "சாந்திபெக்ஸ்" என்ற தலைப்பில் மகாத்மா காந்தி 150வது பிறந்தநாளை முன்னிட்டு தபால் கண்காட்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுதில் கோபால் ஜாக்ரே தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 5,6,7 தேதிகளில் தபால் தலை கண்காட்சி தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக டெக்னோ பார்க் அரங்கில் நடைபெறும் என முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜாக்ரோ தெரிவித்தார். 

இது குறித்து கூட் ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி "சாந்திபெக்ஸ்" 2019 என்ற தலைப்பில் நடைபெற உள்ளதாக கூறினார். கோவை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் இதில் மாணவர்களுக்கு வினாடி வினா, ஓவிய போட்டி, கடிதம் எழுதுதல், புதிர் விடுவித்தல், தபால் பட்டறை உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் மாணவ, மாணவிகள் மகிழும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளது என தெரிவித்தார். இலவச அனுமதியுடன், காலை 10 மணி முதல் மாலை 7 வரை இந்த கண்காட்சி நடைபெறும் எனவும் இன்றைய தலைமுறையினர் தபால் துறை மற்றும் அதன் செயல்பாடுகள் அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...