திருப்பூர் : பாஜகவின் தமிழக தலைவர் யார் என்பதை பாஜகவின் தலைமை முடிவு செய்யும் என பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
திருப்பூர் : பாஜகவின் தமிழக தலைவர் யார் என்பதை பாஜகவின் தலைமை முடிவு செய்யும் என பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
திருப்பூரில் பாஜகவின் கோட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம், தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பொய்யான குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றன. காஷ்மீரின் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஏன், அதனால் காஷ்மீருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மாவட்டம் தோறும் பாஜக சார்பில் கூட்டங்கள் நடத்த இருப்பதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் திமுக ஆரம்பத்தில் எதிர்ப்பு நிலைப்பாடு இருந்த நிலையில், பொதுமக்களிடம் திமுகவிற்கு ஆதரவு இல்லாத காரணத்தால் தற்போது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
அதேபோல், தமிழக பாஜக தலைவர் யார் என்பதை விரைவில் பாஜகவின் தலைமை முடிவு செய்யும் எனவும் பாஜக தலைவர் இல்லாத காரணத்தால் பாஜகவின் செயல்பாடுகளில் எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
திருப்பூரில் பாஜகவின் கோட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம், தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பொய்யான குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றன. காஷ்மீரின் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஏன், அதனால் காஷ்மீருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மாவட்டம் தோறும் பாஜக சார்பில் கூட்டங்கள் நடத்த இருப்பதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் திமுக ஆரம்பத்தில் எதிர்ப்பு நிலைப்பாடு இருந்த நிலையில், பொதுமக்களிடம் திமுகவிற்கு ஆதரவு இல்லாத காரணத்தால் தற்போது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
அதேபோல், தமிழக பாஜக தலைவர் யார் என்பதை விரைவில் பாஜகவின் தலைமை முடிவு செய்யும் எனவும் பாஜக தலைவர் இல்லாத காரணத்தால் பாஜகவின் செயல்பாடுகளில் எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.