திருப்பூர் : திருப்பூரில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த தி.மு.க. பிரமுகரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருப்பூர் : திருப்பூரில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த தி.மு.க. பிரமுகரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். தி.மு.க. மாணவரணி அமைப்பு நிர்வாகியான இவர், கல்லூரி சாலையில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் உட்பட பலருக்கும் வட்டிக்கு பணம் அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், கல்லூரி சாலையில் ஐயப்பன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருசக்கர வாகனத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில், நிலைதடுமாறி சாலையில் விழுந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல், அவிநாசி சாலை வழியாக தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர காவல் துணை ஆணையர் உமா தலைமையிலான வடக்கு போலீஸார், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பரபரப்பான சாலைப் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். தி.மு.க. மாணவரணி அமைப்பு நிர்வாகியான இவர், கல்லூரி சாலையில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் உட்பட பலருக்கும் வட்டிக்கு பணம் அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், கல்லூரி சாலையில் ஐயப்பன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருசக்கர வாகனத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில், நிலைதடுமாறி சாலையில் விழுந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல், அவிநாசி சாலை வழியாக தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர காவல் துணை ஆணையர் உமா தலைமையிலான வடக்கு போலீஸார், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பரபரப்பான சாலைப் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.