நீலகிரி : நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விசர்ஜன ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, உதகையில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
நீலகிரி : நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விசர்ஜன ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, உதகையில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
நாளை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவானது, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்காக பல்வேறு இடங்களிலிருந்து சிலைகள் கொண்டு வரப்பட்டு, அதற்கு தேவையான பூஜைகளை செய்து பொதுமக்கள் வழிபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தியின் மூன்றாம் நாளாக நடைபெறும் விசர்ஜன ஊர்வலம் நாடு முழுவதும் உள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த ஊர்வலத்திற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் ஒவ்வொரு ஆண்டும் பலப்படுத்தப்படும்.
இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் இந்த விசர்ஜன ஊர்வலத்திற்கான கொடி அணிவகுப்பு இன்று உதகை குன்னூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்று அடைந்து, பின்பு பல்வேறு சாலைகள் வழியே இந்த பேரணியானது நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.