கோவை : சரவணம்பட்டி அருகே ரவுடி கும்பல் ஒன்று கத்தி, அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : சரவணம்பட்டி அருகே ரவுடி கும்பல் ஒன்று கத்தி, அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ரவுடிகள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, போலீசார் இதுபோன்ற பயங்கர ஆயுதங்களால் கேக் வெட்டி கொண்டாடி புகைப்படங்களை வெளியிடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்படி, இதுவரை தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களில் பல பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு மண்டல காவல் எல்லைக்குட்பட்ட சேலம் மாவட்டத்தில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி ஜீசஸ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதேபோல, சென்னையில் ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகள் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கோவையில் மேலும் ஒரு ரவுடி கும்பல் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கோவையில் முதல் முறையாக இது போன்ற புகைப்படம் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ரவுடிகள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, போலீசார் இதுபோன்ற பயங்கர ஆயுதங்களால் கேக் வெட்டி கொண்டாடி புகைப்படங்களை வெளியிடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்படி, இதுவரை தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களில் பல பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு மண்டல காவல் எல்லைக்குட்பட்ட சேலம் மாவட்டத்தில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி ஜீசஸ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதேபோல, சென்னையில் ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகள் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கோவையில் மேலும் ஒரு ரவுடி கும்பல் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கோவையில் முதல் முறையாக இது போன்ற புகைப்படம் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.