பருவமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட பரளிக்காடு சூழல் சுற்றுலா அடுத்தவாரம் மீண்டும் துவக்கம்

கோவை : பில்லூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கான முன்பதிவு திங்கள் முதல் துவக்க உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

கோவை : பில்லூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கான முன்பதிவு திங்கள் முதல் துவக்க உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களை கொண்டு நடத்தப்படும் இந்த சூழல் சுற்றுலாவில் முன்பதிவு செய்து சுற்றுலா பயணிகள் அனைவரும் பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியில் நடைபெறும் படகு சவாரியில் பயணம் செய்து இயற்கையை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்ற மாதம் பெய்த பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணையானது தனது முழுகொள்ளளவை எட்டியதால், அணையின் நான்கு மதகுகள் வழியே உபரிநீரானது 58,000 கன அடிவரை வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் நடைபெற்று வந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா கடந்த 5ஆம் தேதி முதல் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டது. மேலும், அதற்கான முன்பதிவுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில், பருவ மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து, அணைக்கான நீர்வரத்து தற்போது 3,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளதால், கடந்த மூன்று வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா அடுத்த வாரம் முதல் மீண்டும் துவங்க உள்ளதாக காரமடை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கான முன்பதிவு வரும் திங்கட்கிழமை முதல் இணையதளம் மூலம் முன்பதிவு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், பூச்சிமரத்தூர் பகுதியில் சுற்றுலாவுக்காக உள்ள வனத்துறை தங்கும் விடுதியும் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் மிகுந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் நடத்தப்படும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...