ஆலந்தூர்: கள்ள நோட்டு மாற்ற முயன்ற வடமாநில வாலிபருக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (55), தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை முக்தம்ஜி தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, வடமாநில வாலிபர் ஒருவர் அவரிடம் காய்கறி வாங்கிவிட்டு, ரூ.1000 நோட்டை கொடுத்துள்ளார்.
லட்சுமி அம்மாளிடம் சில்லரை இல்லாததால், அருகில் உள்ள கடைக்கு சென்று, அந்த ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார். அதை பரிசோதித்த கடைக்காரர் அந்த நோட்டு கள்ளநோட்டு என்பதை உறுதி செய்தார். இதுபற்றி அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அங்கிருந்து தப்பி ஓடினார்.
அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு முருகதாஸ், அந்த வாலிபரை மடக்கி பிடித்து, பரங்கிமலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், கொல்கத்தாவை சேர்ந்த தரிபுல்லா (35) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வரும் அப்துல் வகாப் (30) என்பவரோடு தங்கி இருப்பதாக கூறினார். இதையடுத்து, போலீசார் அங்கு சென்றபோது, அவர் தலைமறைவானது தெரிந்தது. இந்நிலையில், அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அப்துல் வகாப்பை நேற்று போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (55), தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை முக்தம்ஜி தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, வடமாநில வாலிபர் ஒருவர் அவரிடம் காய்கறி வாங்கிவிட்டு, ரூ.1000 நோட்டை கொடுத்துள்ளார்.
லட்சுமி அம்மாளிடம் சில்லரை இல்லாததால், அருகில் உள்ள கடைக்கு சென்று, அந்த ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார். அதை பரிசோதித்த கடைக்காரர் அந்த நோட்டு கள்ளநோட்டு என்பதை உறுதி செய்தார். இதுபற்றி அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அங்கிருந்து தப்பி ஓடினார்.
அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு முருகதாஸ், அந்த வாலிபரை மடக்கி பிடித்து, பரங்கிமலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், கொல்கத்தாவை சேர்ந்த தரிபுல்லா (35) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வரும் அப்துல் வகாப் (30) என்பவரோடு தங்கி இருப்பதாக கூறினார். இதையடுத்து, போலீசார் அங்கு சென்றபோது, அவர் தலைமறைவானது தெரிந்தது. இந்நிலையில், அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அப்துல் வகாப்பை நேற்று போலீசார் கைது செய்தனர்.