கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர் கைது

ஆலந்தூர்: கள்ள நோட்டு மாற்ற முயன்ற வடமாநில வாலிபருக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (55), தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை முக்தம்ஜி தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, வடமாநில வாலிபர் ஒருவர் அவரிடம் காய்கறி வாங்கிவிட்டு, ரூ.1000 நோட்டை கொடுத்துள்ளார். 

லட்சுமி அம்மாளிடம் சில்லரை இல்லாததால், அருகில் உள்ள கடைக்கு சென்று, அந்த ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார். அதை பரிசோதித்த கடைக்காரர் அந்த நோட்டு கள்ளநோட்டு என்பதை உறுதி செய்தார். இதுபற்றி அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அங்கிருந்து தப்பி ஓடினார்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு முருகதாஸ், அந்த வாலிபரை மடக்கி பிடித்து, பரங்கிமலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், கொல்கத்தாவை சேர்ந்த தரிபுல்லா (35) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். 

இவர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வரும் அப்துல் வகாப் (30) என்பவரோடு தங்கி இருப்பதாக கூறினார். இதையடுத்து, போலீசார் அங்கு சென்றபோது, அவர் தலைமறைவானது தெரிந்தது. இந்நிலையில், அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அப்துல் வகாப்பை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...