கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஐந்து வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஐந்து வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் வெளியானதையடுத்து கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவையில் 3 பேரிடம் சிறப்பு நுண்ணறிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அவர்களிடம் நடத்திய விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாததையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு பணிகள் மெல்ல மெல்ல விலக்கி கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை திடீரென தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட வின்சென்ட் சாலையில் இரண்டு வீடுகளிலும், உக்கடம் ஜி.எம். நகரில் இரண்டு வீடுகளிலும், பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், கோவையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.