சொத்து வரி உயர்வு, சூயஸ் ஒப்பந்தத்தை கண்டித்து கோவையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கோவை : சொத்து வரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : சொத்து வரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சூயஸ் நிறுவனத்திற்கு 26 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டது உள்ளிட்டவற்றை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் குடிநீர் திட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். எந்த அரசும் செய்யாத வகையில் நூறு சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், சட்டமன்றத்தில் உறுதியளித்தபடி சொத்து வரி உயர்வை தமிழக அரசு குறைக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 



மேலும், சொத்து வரி உயர்வு பொதுமக்களுக்கு சுமையாக அமையுமெனவும், சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கியிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், சொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் குடிநீர் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...