அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை விவகாரம் : தொழிற்சங்கங்கள் சார்பில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையினை கார்பரேட் நிறுவனமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5 நாட்கள் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் சார்பில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையினை கார்பரேட் நிறுவனமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5 நாட்கள் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் சார்பில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உட்பட அகில இந்திய அளவில் உள்ள 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனைக் கண்டித்து தொழிற்சங்க சம்மேளனங்கள் அகில இந்திய அளவில் ஒரு மாத வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. அதன்படி, கடந்த 20-ம் தேதி முதல் ஒருமாத வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 2 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டன. 



இந்த நிலையில், பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறை செயலாளருடன் தொழிற்சங்க சம்மேளன நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில், வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இன்று முதல் பணிக்கு திரும்பினர். இதையடுத்து, தி.மு.க., .காங்கிரஸ், விடுலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி. உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு தன்னுடைய முடிவை மாற்றாவிட்டால், மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...