தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழுவின் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிரைவேற்றம்

கோவை : இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ. 5,000 உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கோவை : இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ. 5,000 உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஹூசூர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அக்கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார் கூறியதாவது :- லோக் அதாலத் மற்றும் சமரச தீர்வு மைய வழக்குகளில் வழக்கறிஞர்கள் கலந்து கொள்வது இல்லை. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் 31-ம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். நீதியரசர்கள் வி.என். பிரகாஷ் மற்றும் வைத்தியநாதன் முன்பு வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை பட்டியலிட வேண்டாம். செக் மோசடி வழக்குகளில் 20 சதவீதம் செலுத்த ஜாமீன்தாரர் கோருவது நிறுத்தி வைக்கப்பட வேண்டும். சுங்க சாவடியில் வழக்கறிஞர்களுக்கு கட்டண வசூலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கபட்டு உள்ளது.



மேலும், பிறப்பு, இறப்பு மற்றும் விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட விஷயங்களை பார் கவுன்சில் தான் சொந்த பொறுப்பில் எடுத்துக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும். நீதித்துறையில் இருந்து வரும் சுற்றறிக்கையை தலைமை நீதியரசருக்கு தெரியாமல் வருகிறது என்ற ஒரு கருத்து இருப்பதால், இந்த சுற்றறிக்கையை பற்றி தலைமை நீதியரசரின் பார்வைக்கு கொண்டு வருவது என செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் தோறும் 5000 ரூபாய் உதவி தொகை வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றபட்டது, எனத் தெரிவித்தார். இந்த செயற்குழுவில் செயலாளர் சலாவுதீன், பொருளாளர் மகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...