கோவையில் சிறு குறுந்தொழில் நிறுவனங்களின் தேவைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் ஆலோசனைக் கூட்டம்

கோவை : கோவையில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகள் மறறும் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கான தேவைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் ஆலோசனைக் கூட்டம் கோவை கொடீசியா அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை : கோவையில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகள் மறறும் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கான தேவைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் ஆலோசனைக் கூட்டம் கோவை கொடீசியா அலுவலகத்தில் நடைபெற்றது.



தொழில் நகரமான கோவையில் பொறியியல் துறை சார்ந்த சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் வங்கிக்கடன் பிரச்சனை போன்றவற்றால் சிறு, குறுந்தொழில் தொடர்ந்து மந்தநிலையில் இருப்பதாக நிறுவனங்களின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், நிறுவனங்களின் பிரச்சனைகள் குறித்தும், அவற்றின் தேவைகளை மத்திய அரசிற்கு எடுத்து செல்லும் விதமாக கோவையில் உள்ள பல்வேறு சிறு,குறுந்தொழில் நிறுவன சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கோவை கொடீசியா அலுவலகத்தில் நடைபெற்றது.



கொடீசியா, கோப்மா, கோ- இந்தியா உள்ளிட்ட 11 நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும், வங்கிக்கடன் கடன் வழங்குவதில் உள்ள பிரச்சனைகள், இறக்குமதி வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதனிடையே, கோவையைப் போலவே திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளிலும் தொழில்துறையினரின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...