தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கும் விதமாக சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் போலீசார் குவிப்பு

கோவை : கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை தகர்க்கும் வகையில், சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


கோவை : கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை தகர்க்கும் வகையில், சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாத கும்பல், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கோவில், வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி, சூலூர் விமானப்படை தளம், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மதம்சார்ந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதோடு, சூலூரை அடுத்த காங்கேயம் பாளையம் பகுதியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சூலூர் பகுதியில் இருந்து கோவை மாநகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைகளுக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 25-க்கும் மேற்பட்ட தற்காலிக சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்த நிலையில், இன்று மதியம் சூலூர் விமானப்படை தளத்திற்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். அங்கு, விமானப்படைத்தள கமாண்டோவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் போது, பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகளிடம் விமானப்படைத்தள கமாண்டோ தெரிவித்தார். அதேபோல, பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த நேரத்திலும் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் விமானப் படைத்தள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...