கோவை : மேட்டுப்பாளையம் அருகே அரசு விடுமுறை அறிவித்தும், அறிவிப்பை மீறி இன்று செயல்பட்ட தனியார் பள்ளியை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே அரசு விடுமுறை அறிவித்தும், அறிவிப்பை மீறி இன்று செயல்பட்ட தனியார் பள்ளியை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் கோகுலாஷ்டமி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இன்று பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் செயல்படும் (கேரவெல்) தனியார் பள்ளி இன்று வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. 10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இன்று சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவித்த ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், அரசு அறிவிப்பினையும் மீறி பள்ளிகள் செயல்படுவது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து விசாரித்ததில் பள்ளி கல்வித்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக கல்வி அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு ஏ.பி.வி.பி அமைப்பினர் பள்ளிக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் உணவு இடைவெளிக்குப் பிறகு அவசர அவசரமாக பள்ளிக்கு விடுமுறை விட்டு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பினர்.
இது குறித்து பேசிய அந்த அமைப்பினர், "அரசு விடுமுறை நாட்களில் இதுபோன்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு முறையும் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் அரசு விடுமுறை நாட்களில் தொடர்ந்து பள்ளிகள் செயல்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளைப் பள்ளி கல்வித்துறை வேடிக்கை பார்க்காமல், அரசு அறிவிப்பினை மதிக்காமல் செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் கோகுலாஷ்டமி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இன்று பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் செயல்படும் (கேரவெல்) தனியார் பள்ளி இன்று வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. 10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இன்று சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவித்த ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், அரசு அறிவிப்பினையும் மீறி பள்ளிகள் செயல்படுவது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து விசாரித்ததில் பள்ளி கல்வித்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக கல்வி அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு ஏ.பி.வி.பி அமைப்பினர் பள்ளிக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் உணவு இடைவெளிக்குப் பிறகு அவசர அவசரமாக பள்ளிக்கு விடுமுறை விட்டு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பினர்.
இது குறித்து பேசிய அந்த அமைப்பினர், "அரசு விடுமுறை நாட்களில் இதுபோன்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு முறையும் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் அரசு விடுமுறை நாட்களில் தொடர்ந்து பள்ளிகள் செயல்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளைப் பள்ளி கல்வித்துறை வேடிக்கை பார்க்காமல், அரசு அறிவிப்பினை மதிக்காமல் செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.