கோவை வேளாண் பல்கலை.,யில் நேபாள நாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை

கோவை : கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் விடுதியில், நேபாள நாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் விடுதியில், நேபாள நாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மருதமலை சாலையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மட்டுமின்றி அண்டை மாநில மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கென பல்கலைக்கழக வளாகத்தில் தனித்தனி விடுதிகள் உள்ளன. அதேபோல, சர்வதேச மாணவர்களுக்கென பிரத்யேக விடுதியும் இங்கு உள்ளது.

இந்த நிலையில், சர்வதேச மாணவர் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவர் ஒருவர் நேற்று இரவு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர் கணேசன், நிர்வாகத்திற்கும் காவல்துறையினருக்கும் உடனடியாக தகவலளித்தார். பின்னர், அங்கு விரைந்த வந்த ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய போலீசார், உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கிய மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த மாணவர் நேபாள நாட்டின் பரத்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் நியூபானே (26)என்பதும், முதுகலை பயிர் நோயியல் துறையில் இரண்டாமாண்டு பயின்று வரும் இவர், நேபாளத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து, பின் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 



இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள ஆர்.எஸ். புரம் காவல்நிலைய போலீசார், விடுதி மாணவர்கள் மற்றும் காப்பாளர் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் கல்லூரி வளாகத்தில் சக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...