கோவை : அன்னூர் அருகே 16 வயது பள்ளி சிறுமியிடம் காதல் ஆசை வார்த்தைகளை கூறி கேரளாவிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கோவை : அன்னூர் அருகே 16 வயது பள்ளி சிறுமியிடம் காதல் ஆசை வார்த்தைகளை கூறி கேரளாவிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் சர்வீசராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சந்தோஷூம் அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியைக் கண்டித்து அவரை விடுதியில் சேர்த்தனர். இந்த நிலையில், அந்த இளைஞர் சிறுமியை விடுதிக்கு செல்லும் வழியில் வைத்து சந்தித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் சிறுமியிடம் கேரளாவிற்கு செல்லலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் கேரளாவிற்கு சென்ற நிலையில் அங்கு வைத்து இளைஞர் சந்தோஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இருவரும் மீண்டும் கோவைக்கு வந்தனர்.
இந்த நிலையில், சிறுமி மீது சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்ததில் அவரை இளைஞர் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் இளைஞரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.