கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் அமைந்துள்ளது வாலாங்குளம். மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்குளம் பல்வேறு ஆக்கிரமிப்பினாலும், பிளாஸ்டிக் கழிவுகளினாலும் சுகாதாரமற்று காணப்படுகிறது.

தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் வருவதையொட்டி தன்னார்வலர் தொண்டு அமைப்பான சிறுதுளி அமைப்பினர் வாலாங்குளத்தினை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கழிவுகள் அனைத்தும் தூர்வாரப்படுவதன் மூலம் குளத்தின் ஆழம் மற்றும் அகலம் அதிகரித்து மழைநீர் சேமிக்கப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் வருவதையொட்டி தன்னார்வலர் தொண்டு அமைப்பான சிறுதுளி அமைப்பினர் வாலாங்குளத்தினை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கழிவுகள் அனைத்தும் தூர்வாரப்படுவதன் மூலம் குளத்தின் ஆழம் மற்றும் அகலம் அதிகரித்து மழைநீர் சேமிக்கப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.