கோவை : சமுக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகள் காஷ்மீரில் பட்டியல் இனத்தவர்களுக்கு 72 ஆண்டுகளாக சலுகைகள் மறுக்கப்பட்டு வந்தது பற்றி கண்டுகொள்ளாதது ஏன்..? என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை : சமுக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகள் காஷ்மீரில் பட்டியல் இனத்தவர்களுக்கு 72 ஆண்டுகளாக சலுகைகள் மறுக்கப்பட்டு வந்தது பற்றி கண்டுகொள்ளாதது ஏன்..? என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது :- காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கின்றன. சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. போன்ற கட்சிகள் கடந்த 72 ஆண்டுகளாக காஷ்மீரில் வசிக்கும் பட்டியல் இனத்தவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் எந்தவித சலுகைகளும் அளிக்கவில்லை, அத்துடன் பழங்குடியின மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது, பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கபட வில்லை. இது குறித்து ஏன் இந்த கட்சிகள் கவலைப்படவில்லை. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மூலம் அந்த மாநிலம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. மாறாக, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதுடன், உள்நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தவே அது பயன்பட்டு வந்தது. எனவே, காஷ்மீரில் வழங்கப்பட்ட சலுகைகள் யாருக்காக பயன்படுத்தப்பட்டன. இது குறித்து தி.மு.க. கேள்வி கேட்கட்டும். மேலும், தற்போது இந்த சட்டப்பிரவு நீக்கப்பட்டதன் மூலம் புதிய இந்தியாவை பிரதமர் உருவாக்கியதுடன், அனைத்து மாநிலங்களும் எந்த பிரிவு இன்றி ஒருங்கிணைந்ததே இந்தியா என்பதை நிருபித்துள்ளார். என பேசினார்.

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது :- காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கின்றன. சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. போன்ற கட்சிகள் கடந்த 72 ஆண்டுகளாக காஷ்மீரில் வசிக்கும் பட்டியல் இனத்தவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் எந்தவித சலுகைகளும் அளிக்கவில்லை, அத்துடன் பழங்குடியின மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது, பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கபட வில்லை. இது குறித்து ஏன் இந்த கட்சிகள் கவலைப்படவில்லை. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மூலம் அந்த மாநிலம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. மாறாக, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதுடன், உள்நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தவே அது பயன்பட்டு வந்தது. எனவே, காஷ்மீரில் வழங்கப்பட்ட சலுகைகள் யாருக்காக பயன்படுத்தப்பட்டன. இது குறித்து தி.மு.க. கேள்வி கேட்கட்டும். மேலும், தற்போது இந்த சட்டப்பிரவு நீக்கப்பட்டதன் மூலம் புதிய இந்தியாவை பிரதமர் உருவாக்கியதுடன், அனைத்து மாநிலங்களும் எந்த பிரிவு இன்றி ஒருங்கிணைந்ததே இந்தியா என்பதை நிருபித்துள்ளார். என பேசினார்.