நீலகிரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 5,034 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 5,034 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 5,034 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வரலாறு காணாத வகையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.



அப்போது அவர் பேசியதாவது :- அவலாஞ்சி மற்றும் ஓவேலி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. போர் கால அடிப்படையில் நிவாரண பணிகள் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான அனைத்தும் வழங்கப்படும். கால்நடைகளுக்கு தீவனங்கள் தேவை உள்ளது. அவை உடனடியாக வழங்கப்படும். மொத்தம் 5 குடும்பங்களுக்கு 50 நிவாரணம் லட்சம் வழங்கபட்டது. நடுவட்டம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. அவலாஞ்சியில் குடியிருப்புகளுக்கு மாற்று இடம் தேவை என்றால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கையை எடுக்கும், என தெரிவித்தார்

இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்னன் நிதி உதவிகளை நடுவட்டம் பகுதியில் வழங்கினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...