கோவை : பருவமழை தீவிரமடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விதைப் பரவலுக்காக 10,000 நாட்டு மர விதை பந்துகள் வனத்துறை மூலம் வீசபட்டன.
கோவை : பருவமழை தீவிரமடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விதைப் பரவலுக்காக 10,000 நாட்டு மர விதை பந்துகள் வனத்துறை மூலம் வீசபட்டன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் இந்த மழையால், வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள் துளிர் விடத் துவங்கியுள்ளன. இந்த நிலையில், இந்த மழையை பயன்படுத்தி வனப்பரப்பளவில் மரங்களை அதிகரிக்கும் நோக்கில், விதைகளை பரப்பும் வகையில் விதை பந்துகள் தயாரிக்கப்பட்டு அவை இன்று மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வீசபட்டன.

மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் நமது மண்ணிண் நாட்டு மரமான வேப்ப மரங்களின் விதைகளைக் கொண்டு 10,000 விதை பந்துகள் தயாரிக்கப்பட்டன. தயார் செய்த விதை பந்துகள் இன்று கோத்தகிரி சாலையில் உள்ள வனப்பகுதியில் விதைக்கப்பட்டன. மேட்டுப்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்று குறிப்பிட்ட இடைவேளையில் காலியாக உள்ள இடங்களில் இந்த விதை பந்துகளை வீசினர். தற்போது, பெய்து வரும் மழை மற்றும் வடகிழக்கு பருவமழையை நம்பி இந்த விதைப்பந்துகள் வீசபட்டுள்ளதாகவும், தற்போது வீசப்பட்டுள்ள விதைகள் ஆறு மாதங்களில் உயிர் பெற்று வளரும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் இந்த மழையால், வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள் துளிர் விடத் துவங்கியுள்ளன. இந்த நிலையில், இந்த மழையை பயன்படுத்தி வனப்பரப்பளவில் மரங்களை அதிகரிக்கும் நோக்கில், விதைகளை பரப்பும் வகையில் விதை பந்துகள் தயாரிக்கப்பட்டு அவை இன்று மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வீசபட்டன.

மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் நமது மண்ணிண் நாட்டு மரமான வேப்ப மரங்களின் விதைகளைக் கொண்டு 10,000 விதை பந்துகள் தயாரிக்கப்பட்டன. தயார் செய்த விதை பந்துகள் இன்று கோத்தகிரி சாலையில் உள்ள வனப்பகுதியில் விதைக்கப்பட்டன. மேட்டுப்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்று குறிப்பிட்ட இடைவேளையில் காலியாக உள்ள இடங்களில் இந்த விதை பந்துகளை வீசினர். தற்போது, பெய்து வரும் மழை மற்றும் வடகிழக்கு பருவமழையை நம்பி இந்த விதைப்பந்துகள் வீசபட்டுள்ளதாகவும், தற்போது வீசப்பட்டுள்ள விதைகள் ஆறு மாதங்களில் உயிர் பெற்று வளரும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.