கோவை : பவானி ஆற்று வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்ட பேரிடர் மீட்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை : பவானி ஆற்று வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்ட பேரிடர் மீட்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பைக் கருதி அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நேற்று இரவு மட்டும் 88,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், நெல்லித்துறை, வனபத்ரகாளியம்மன் கோயில், பவானி பாலம், ஓடந்துறை, சிறுமுகை, கிச்சகத்தியூர் ஆகிய பகுதிகளில் ஆற்று நீர் வீட்டினுள் புகுந்தது. எனவே, அப்பகுதி பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் வருவாய் துறையினர் தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில், வருவாய் துறையினர் சார்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறையினர் கலந்து கொண்ட பேரிடர் மீட்பு ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே சின்னராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருகின்ற இரண்டு நாட்கள் அதிக அளவில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதாகவும், இதனால் பவானி ஆற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கு தகுந்தாற்போல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும், தீயணைப்புத் துறை, காவல்துறை பொதுப்பணித்துறை மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், இரவு பகல் பாராமல் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், வட்டாட்சியர் சாந்தாமணி, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பைக் கருதி அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நேற்று இரவு மட்டும் 88,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், நெல்லித்துறை, வனபத்ரகாளியம்மன் கோயில், பவானி பாலம், ஓடந்துறை, சிறுமுகை, கிச்சகத்தியூர் ஆகிய பகுதிகளில் ஆற்று நீர் வீட்டினுள் புகுந்தது. எனவே, அப்பகுதி பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் வருவாய் துறையினர் தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில், வருவாய் துறையினர் சார்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறையினர் கலந்து கொண்ட பேரிடர் மீட்பு ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே சின்னராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருகின்ற இரண்டு நாட்கள் அதிக அளவில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதாகவும், இதனால் பவானி ஆற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கு தகுந்தாற்போல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும், தீயணைப்புத் துறை, காவல்துறை பொதுப்பணித்துறை மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், இரவு பகல் பாராமல் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், வட்டாட்சியர் சாந்தாமணி, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.