கோவை : நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரலாறு காணாத வகையில் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை : நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரலாறு காணாத வகையில் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இரண்டு கரைகளை தாண்டி வெள்ளநீர் செல்லும் அளவிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள நொய்யல் ஆற்றுப் பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பாலத்திற்கு மேலே பல அடி தூரத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால், சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாலத்திற்கு மேலே தண்ணீர் செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
இதேபோல, ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் உள்ள தரைப்பாலமும் நீரில் மூழ்கியுள்ளது. இரண்டாவது நாளாக அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஒட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றி நகருக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கோவையில் பெய்யும் கனமழையின் காரணமாக, நொய்யல் ஆற்றில் 4,650 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இரண்டு கரைகளை தாண்டி வெள்ளநீர் செல்லும் அளவிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள நொய்யல் ஆற்றுப் பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பாலத்திற்கு மேலே பல அடி தூரத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால், சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாலத்திற்கு மேலே தண்ணீர் செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
இதேபோல, ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் உள்ள தரைப்பாலமும் நீரில் மூழ்கியுள்ளது. இரண்டாவது நாளாக அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஒட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றி நகருக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கோவையில் பெய்யும் கனமழையின் காரணமாக, நொய்யல் ஆற்றில் 4,650 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.