சத்தி - திம்பம் சாலையில் மரம் விழுந்ததால், நடு காட்டில் தத்தளித்த பேருந்து. 4 கிமீ நடந்து சென்று உதவி கோரிய பயணிகள் மற்றும் நடத்துநர்

ஈரோடு : சத்தி - திம்பம் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை நம்ம ஈரோட்டு பசங்க குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்து சீர் செய்ய உதவினர்.


ஈரோடு : சத்தி - திம்பம் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை நம்ம ஈரோட்டு பசங்க குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்து சீர் செய்ய உதவினர். 

இன்று காலை 6 மணிக்கு சத்தியில் இருந்த புறப்பட்ட அரசுப் பேருந்து திம்பம், தலமலை வழியாக தாளவாடி சென்று கொண்டிருந்தது. அப்போது, காளிதிம்பம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் மழையின் காரணமாக மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடர்ந்த மலைப் பகுதி என்பதால், செல்போன் சிக்னல் கிடைக்காததால், உதவிக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், நடத்துநர் முத்துக்குமார் ,ஈரோடு விஜி, மாவநத்தம் சந்திரன் ஆகியோர் கொட்டும் மழையிலும், வனவிலங்குகள் நிறைந்த காட்டு வழியே சுமார் 4 கி.மீ. நடந்து சென்று மாவநத்தத்தில் கத்தி, கோடாரி உள்ளிட்ட கருவிகளை வாங்கிக் கொண்டு வன ஊழியர்களை அழைத்து வந்தனர். 



அவர்களுடன் நம்ம ஈரோட்டுப் பசங்க குழுவினர் பூபதி, கனி, சந்தோஷ், முத்து, சுந்தர், சக்தி, விஜி ஆகியோர் இணைந்து சுமார் 2 மணிநேரம் போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே, போக்குவரத்து சரி செய்யப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்ய உதவிய அனைவருக்கும் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...