நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலந்ததால் சாலைகளில் படர்ந்து கிடக்கும் நுரைகள் : வாகனத்தை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி

கோவை : ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் உள்ள தாரைப்பாலத்தின் கீழ் பாயும் நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலந்ததன் காரணமாக ஏற்பட்ட நுரைகள் சாலைகளில் படர்ந்து கிடந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


கோவை : ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் உள்ள தாரைப்பாலத்தின் கீழ் பாயும் நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலந்ததன் காரணமாக ஏற்பட்ட நுரைகள் சாலைகளில் படர்ந்து கிடந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், சாயக்கழிவுகள் கலப்பினால் ஆத்துப்பாலம் அருகேயுள்ள ஆனைமேடு மற்றும் ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலைகளில் நீரில் வெள்ளை நிற நுரை பொங்கி வழிந்தது. 



நுரை அதிகளவில் காற்றில் பரவி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, நொய்யல் ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. மேலும், வெள்ள நீரில் இருந்து பொங்கி வரும் நுரை சாலை முழுவதும் படர்ந்துள்ளது. நீரும், நுரையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு சில கனரக வாகனங்கள் பாலத்தை கடந்த போது, நுரை வாகனங்கள் முழுவதும் படிந்தது. நுரை அதிகளவில் காற்றில் பறந்து செல்வதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். சாயக்கழிவுகள் கலப்பதே நுரை ஏற்படக் காரணமென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...