கோவை : மாட்டுக்கறி தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, தண்டனை கைதி போல நடத்தப்பட்டதோடு, சிறை காவலர்கள் மனரீதியாக துன்புறுத்தியதாக தி.வி.க. கோவை மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை : மாட்டுக்கறி தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, தண்டனை கைதி போல நடத்தப்பட்டதோடு, சிறை காவலர்கள் மனரீதியாக துன்புறுத்தியதாக தி.வி.க. கோவை மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மாட்டுக்கறி தொடர்பாக முகநூலில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- மாட்டுக்கறி தொடர்பாக பதிவிட்டதற்காக என் மீது புகாரளித்த மணிகண்டன் என்பவர் எனது முகநூலில் நண்பராக இல்லை. காவல்துறையே புகாரளிக்க வைத்து, என்னை கைது செய்தனர். விசாரணை கைதியான நான் சிறையில் தண்டனை கைதி போல நடத்தப்பட்டேன். மனரீதியாக சிறையில் இருந்த காவலர்கள் துன்புறுத்தினர்.
தினமும் 10 நிமிடங்கள் குளிக்க மட்டுமே வெளியே விட்டனர். சிறை உணவு தரமற்றதாக இருந்தது. இந்து முன்னணி நிர்வாகிகள் போல சிறை காவலர்கள் செயல்பட்டனர். வழக்கறிஞர்களைக் கூட என்னை சந்திக்க விடவில்லை. முகநூலில் எழுதியதற்காக என்னை கைது செய்ததாக நினைக்கவில்லை. பா.ஜ.க.விற்கு எதிரானவர்களை ஒடுக்கும் முயற்சியாக எனது கைது நடவடிக்கையை நினைக்கிறேன். தொடர்ச்சியாக, இந்துத்துவா கருத்தியலுக்கு எதிராக எழுதுவேன், என தெரிவித்தார்.
மாட்டுக்கறி தொடர்பாக முகநூலில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- மாட்டுக்கறி தொடர்பாக பதிவிட்டதற்காக என் மீது புகாரளித்த மணிகண்டன் என்பவர் எனது முகநூலில் நண்பராக இல்லை. காவல்துறையே புகாரளிக்க வைத்து, என்னை கைது செய்தனர். விசாரணை கைதியான நான் சிறையில் தண்டனை கைதி போல நடத்தப்பட்டேன். மனரீதியாக சிறையில் இருந்த காவலர்கள் துன்புறுத்தினர்.
தினமும் 10 நிமிடங்கள் குளிக்க மட்டுமே வெளியே விட்டனர். சிறை உணவு தரமற்றதாக இருந்தது. இந்து முன்னணி நிர்வாகிகள் போல சிறை காவலர்கள் செயல்பட்டனர். வழக்கறிஞர்களைக் கூட என்னை சந்திக்க விடவில்லை. முகநூலில் எழுதியதற்காக என்னை கைது செய்ததாக நினைக்கவில்லை. பா.ஜ.க.விற்கு எதிரானவர்களை ஒடுக்கும் முயற்சியாக எனது கைது நடவடிக்கையை நினைக்கிறேன். தொடர்ச்சியாக, இந்துத்துவா கருத்தியலுக்கு எதிராக எழுதுவேன், என தெரிவித்தார்.